#Chennai
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Chennai குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் "ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்"; பங்குகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, ஜூன் 26 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 6 கி.மீட்டர் தூரம் நடைபெறும் 'ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க 11.06.2026 முதல் 22.06.2026 வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விரைந்து மின்தடை சீரமைக்க 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 ரோந்து வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 13.06.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்
சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வருகின்ற 13.06.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் 'லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி'
தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் 'லேப்டாப் பயிற்சி'யை வரும் 15.06.2026 முதல் 19.06.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்த உள்ளது.
5 நாட்கள் மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம்
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம் சென்னை, கிண்டியில் 2026 ஜூன் 15 முதல் 19 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்தும் மூன்று நாள் 'இ-வணிகம்' பயிற்சித் திட்டம்
சென்னை, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), ஜூன் 16, 2026 முதல் ஜூன் 18, 2026 வரை அதன் சென்னை வளாகத்தில் மூன்று நாள் 'இ-வணிகம்' பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் உத்தரவு
மாண்புமிகு அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் பதிவுத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் சேவை மேம்பாடு மற்றும் வருவாய் இலக்குகளை அடையவும் அறிவுறுத்தப்பட்டது.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
2026ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல் (ம) சுவடியியல் தொடர்பான கோடைக்காலப் பயிற்சி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னையில் 2026ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல் மற்றும் சுவடியியல் தொடர்பான கோடைக்காலப் பயிற்சி வகுப்புகளை சூன் 15ஆம் தேதி முதல் 20 நாட்களுக்கு நடத்துகிறது. இப்பயிற்சியில் சுவடிகள் பாதுகாப்பு, படியெடுத்தல், பதிப்பித்தல் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10.06.2026.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், ஜூன் 5, 2026 அன்று காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி சென்னை பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் உணவுத் தரம் மற்றும் விநியோகத்தை திடீர் ஆய்வு செய்தார், மேலும் குழந்தைகள் நல மையங்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, தரம், சுவை மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தினார்.