#Chennai
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Chennai குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் 'வெப்பத் தாங்கு திறன் கொண்ட தமிழ்நாட்டை நோக்கி – வெப்ப அபாய மேலாண்மை' பயிலரங்கினை தொடங்கி வைத்தார்
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், சென்னையில் 'வெப்பத் தாங்கு திறன் கொண்ட தமிழ்நாட்டை நோக்கி – வெப்ப அபாய மேலாண்மை' பயிலரங்கினை தொடங்கி வைத்தார். பேரிடர் மேலாண்மைக்கான ₹50 கோடி சுழற்சி நிதி, விரிவான தன்னார்வலர் பயிற்சி, மற்றும் அமையவுள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஆகியவை இதில் எடுத்துரைக்கப்பட்டன. தமிழ்நாடு மாநில வெப்ப செயல் திட்டம் 2026 மற்றும் நகர்ப்புற வானிலை ஆய்வு, வெப்பத் தாங்குதிறன் தொடர்பான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அடையாறு ஆறு மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணி: மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவுப்படி அமைச்சர் திரு.என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப்பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டம், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்து களப்பணியை ஆய்வு செய்தார்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், கோயம்பேட்டில் இயங்கிவரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.07.2026) சென்னை, கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் (Tertiary Treatment Reverse Osmosis - TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் சென்னையில் சமூக உரையாடல் மற்றும் பணியிட ஒத்துழைப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை துவக்கி வைத்தார்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சார்பில், "சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்" குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் சென்னையில் துவக்கி வைத்தார்.
சென்னை மாவட்டத்தில் கூவம் ஆறு மற்றும் ஒக்கியம் மடு தூர்வாரும் பணியை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார்
முதலமைச்சரின் உத்தரவுப்படி, சென்னை மாவட்டத்தில் பாடிக்குப்பம் அருகே கூவம் ஆறு மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் அருகே ஒக்கியம் மடு தூர்வாரும் பணியை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார். இது நீர் ஓட்டத்தை மேம்படுத்தி வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை 27.07.2026 அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் (27.07.2026) திங்கட்கிழமை அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கவுள்ளார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு ஆய்வில் மொத்தம் ஆறு முக்கிய இடங்களில் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - 3 நாட்கள் "ஊடக ஆளில்லா விமான இயக்கப் பயிற்சித் திட்டம்"
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) ஆனது ஜூலை 27 முதல் 29, 2026 வரை 3 நாட்கள் 'ஊடக ஆளில்லா விமான இயக்கப் பயிற்சித் திட்டத்தை' அதன் சென்னை வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது, இது பங்கேற்பாளர்களுக்கு ஆளில்லா விமான இயக்க திறன்களை வழங்கும் நோக்கம் கொண்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு ஆலையை பார்வையிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மைக்கு உத்தரவுகள் பிறப்பித்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை சேத்துப்பட்டில் பொது-தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் உயிரி-எரிவாயு ஆலையை நேரில் பார்வையிட்டார். தினமும் உருவாகும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை எரிவாயு மற்றும் உரமாக மாற்றவும், மக்காத குப்பைகளை சாலை அமைக்கவும், சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் கழிவு மேலாண்மையை அறிவியல் பூர்வமாக காலக்கெடுவுடன் செயல்படுத்தவும் அறிவுறுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு
ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர், தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது, உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கம் செய்வது மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். ஃபோர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான 30 வருட உறவை நினைவுகூர்ந்த முதலமைச்சர், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழுமையாகப் பயன்படுத்தி, உற்பத்தியையும் விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அமைந்துள்ள முன்காண் திரையரங்கில் முதன்முறையாக மன இறுக்கம் (Autism) கொண்ட 40 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு திரைப்படம் திரையிடும் நிகழ்ச்சியினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் இன்று (18.07.2026) தொடங்கி வைத்தார்கள்.
மன இறுக்கம் கொண்ட 40 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு, பொது இடங்களுக்குச் செல்லும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் திரைப்படம் திரையிடும் நிகழ்ச்சி அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 'Finding Nemo' எனும் உயிர்பூட்டல் படம் திரையிடப்பட்டது.
தமிழ்நாடு நாள் விழா: மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது
ஜூலை 18, 2026 அன்று சென்னை, தரமணியில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில், அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.