பொதுத்துறை
முதலமைச்சர் அலுவலக அறிவிப்புகள், நெறிமுறைகள் மற்றும் முக்கிய நிர்வாக உத்தரவுகள்.
உலக புகைப்பட நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
உலக புகைப்பட நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புகைப்படக் கலைஞர்களுக்கு சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கும் வகையில் வெளியிட்ட அறிவிப்புகள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி (மாதம் ரூ.75,000/-) மற்றும் உதவியாளர் படி (மாதம் ரூ.25,000/-) வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வெளியிட்ட அறிவிப்பு.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளார். இதில் அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கும்பகோணம் திருக்கோயிலிலிருந்து களவாடப்பட்டு இங்கிலாந்திலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 17.8.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலிலிருந்து களவாடப்பட்டு, இங்கிலாந்து நாட்டிலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையைப் பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ், விவசாயப் பெருமக்களின் நலனிற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 'மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்' மற்றும் 'ஒரு புதிய தொடக்கம்' என்ற காலப்பேழை புத்தகம் வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தனது அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கிடும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்' மற்றும் 'ஒரு புதிய தொடக்கம்' என்ற காலப்பேழை புத்தகங்களை வெளியிட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து உயிரிழந்த முதல்நிலைக் காவலர் திரு.A.தர்மராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் தெரிவித்து, முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துச் செய்தி
இந்திய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைக்காகப் போராடிய தியாகிகளை நினைவுகூர்ந்து, நாட்டின் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் சமூக நீதியை நிலைநிறுத்த உறுதியளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வடபட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான வெடி பொருட்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வடபட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான வெடி பொருட்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் ஆறுதல் அறிவித்துள்ளார்.
ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (13.8.2026) கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகையும் விடுவிக்க நடவடிக்கை கோரி மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும், அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (13.8.2026) கடிதம் எழுதியுள்ளார்.